சர்க்கரை நோயின் முக்கியமான வகைகள்
சர்க்கரை நோயை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
டைப் 1 (TYPE-1)
டைப் 2 (TYPE-2)
முதல் வகை (TYPE-1)
நம் நாட்டில் 100-ல் 2 பேருக்கு தான் இந்த டைப் 1 உள்ளது.
சில வகை சிகிச்சைக்கான மருந்துகள், சில கிருமி தாக்குதல்கள் அல்லது நோய்த்தொற்று காரணமாக இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள் அழிகின்றன. அத்தகைய சமயங்களில் இன்சுலின் உற்பத்தி இல்லை இந்தக் காரணத்தால் ஏற்படும் சர்க்கரை நோய்க்கு டைப் 1 என்று பெயர். இந்த டைப் 1நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட வேண்டும்.
இரண்டாம்வகை (TYPE-2)
நம் நாட்டில் 100-க்கு 95-98 பேருக்கு இந்த டைப் 1 உள்ளது.
1.இன்சுலின் செயல் திறனில் குறைபாடு (Inefficient action)
இன்சுலின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை எனப்படும் பீட்டா செல்கள் போதிய அளவில் இருந்தாலும் அவற்றின் செயல்பாட்டில் குறை இருக்கும் அதனால் (பிற்காலத்தில்) இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடும் (பரம்பரையாக)
2.இன்சுலின் சுரப்பில் குறைபாடு (Insufficient secretion)
இன்சுலின் சுரக்கும் தொழிற்சாலை (கணைய பீட்டா செல்கள்) போதிய அளவு வேலை செய்யாமல் இன்சுலின் சுரப்பில் குறைபாடு.
உடல் அதிக பருமனாக உள்ளவர்கள், அதாவது தங்களுடைய உடல் உழைப்பு, உயரம், வயது இவற்றை மனதில் கொள்ளாமல் தேவைக்கு அதிகமாக உண்பவர்களுக்கு இது ஏற்படுகிறது.
சிந்திபீர்!!!
உலக அளவில் டைப்-1 அதிகமாக உள்ள நாடு பின்லாந்து ஆனால் இந்தியாவைவிட முதல்வகை (டைப் -1) சர்க்கரை நோய் அதிகமாக உள்ள நாடு அமெரிக்கா, உலக அளவில் இரண்டாம்வகை (டைப் 2) சர்க்கரை நோய் அதிகமாக உள்ள நாடு இந்தியா மற்றும் சீனா.
முதல்வகை சர்க்கரை நோய் (டைப்-1)
சிறுவயது முதலே இந்த நோய் வருவதால் அவர்கள் சுயகட்டுப்பாடு உடன் உள்ளார்கள் அதாவது தினசரி ஒரு நாளும் விடாத உடற்பயற்சி மற்றும் உணவுமுறை மற்றும் இன்சுலின் ஊசிபோடுதல் போன்ற பழக்கங்கள் அவர்களை நெறிமுறைபடுத்துகிறது. ஆகையால் அவர்களது உடல் ஆரோக்கியமாக உள்ளது (எ. கா) ஓர் சிறந்த நடிகர் அரசியலில் கால் பதித்திருக்கிறார்.
உடல் ஆரோக்கியம்!
மனம் தெளிவு பெறு!!
தன்னம்பிக்கை வளரும்!!!
செய்யும் தொழில் சிறப்பாக செய்ய முடியும்!!!!
உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனம் தெளிவாக இருக்கும்!
மனம் தெளிவாக இருந்தால் தன்னம்பிக்கை இருக்கும்!!
தன்னம்பிக்கை இருந்தால் செய்யும் தொழிலில் முன்னேற்றம்!!!
பொருளாதாரத்திலும் முன்னேற்றமாக அமையும்!!!!
இரண்டம் வகை சர்க்கரை நோய் (டைப்-2)
நம் நாட்டில் இரண்டாம் வகை சர்க்கரை நோய் அதிகம் உள்ளது சில,பல நபர்களுக்கு 20 வயதிற்கு மேல் தான் சர்க்கரை வெளிப்படும் அல்லது எந்த வயதில் வேண்டுமானாலும் சர்க்கரை நோய் வெளிப்படும், அதற்கு முன்பு எந்த சுய கட்டுப்பாடும் இல்லாமல் உடற்பயிற்சியும் ,உணவுமுறையும் கடைப்பிடிக்காதல் எவ்வளவு திறமை இருந்தும் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதே சோகமான உண்மை.
உன் வாழ்க்கை உன் கையில்!
காலம் நம் கையில் உள்ளது!!
இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்க வேண்டாம்!!!
உடற்பயிற்சி!!!!
உணவுமுறை!!!!!
சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு அறிந்து,
அதனை செயல்படுத்தினால் சர்க்கரை நோயை வென்ற-வாழ்க்கை மட்டுமல்லாது பொருளாதார நிலையிலும் முன்னேற முடியும்...
No comments:
Post a Comment